Thursday, July 16

நீங்கள் தற்கொலை செய்துக்கொள்ள சில யோசனைகள் அல்லது கடும் கோடைக்காதல் காலம்



அவள்
உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்
நீங்கள் பிரியத்தின் வெவ்வேறு வடிவங்களை உணர்த்திக் கொண்டிருக்கிறீர்கள்
அவள்
தன் துக்கங்களை பகிர்ந்து
புதிர்களுக்கான முடிச்சுகளை காட்டுகிறாள்
நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்
அவளை அவளாகவே
உங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறாள்
சிரிப்பதாக பாவித்த நீங்கள்
ஒரு பனிநனைத்த அதிகாலையில்
அவளின் படத்தை பார்த்து கதறியழுதீர்கள்
பிறகு
தனித்த பயணத்தில்
சூரியன் முகத்தில் விழும் கணத்தில்
அழுது தீர்த்தீர்கள்
நாட்கள் கழிய
உங்களை பிடிக்கும் என்கிறாள்
சொற்களை
உங்களோடு புதைத்து
கொஞ்சமாகச் சிரிக்கிறீர்கள்
நேற்றுமில்லாத இன்றுமில்லாத
தருணத்தில்
உங்களின் அழகின்மையை பட்டியலிட்டு
நீங்கள்
கட்டியிருந்த
ஆளுமையை
சிதைக்கிறாள்
உங்களின் துக்கத்தை அறிந்தவளாய்
தான்
சொன்னவை எதுவும் பொருளற்றவை
தன்
சிக்கல்களின் வெற்று பிம்பங்கள் என்கிறாள்
நீங்கள்
நிராகரிக்க எதுவுமில்லை
உண்மையின் வெம்மையில் கசங்கத் துவங்குகிறீர்கள்
இந்தத் தார்ச்சாலையின் மதிய வெயிலில்
வாகனத்தில் நசுங்குவது கூட
உங்களுக்கு
ஆசுவாசம் தரக்கூடும்
கண்ணீரில் கரையத் துவங்கும்
உங்களைப் பார்த்து செருப்புத் தைப்பவன்
வருத்தப்பட்டிருக்கலாம்
உங்களுக்கு அடுத்தவரின் கருணை தேவையில்லை
உங்களின் துக்கம் உங்களுக்கானது
இந்தக் கண்ணீருக்கான அர்த்தம் முடிவற்றது
உறங்கச் செல்கிறீர்கள்
இரவின் வெறுமை உங்களை விழிக்கச் செய்கிறது.
அருகில் கிடக்கிறது ஒரு நைலான் கயிறு.


நன்றி :வா.மணிகண்டன் (http://pesalaam.blogspot.com/2009/02/blog-post_05.html)

வார விடுமுறை நாளின் எல்லா கொண்டாட்டங்களையும் முடித்து விட்டு அறைக்கு திரும்புகையில் விடியற்காலை மணி மூன்று ஆகியிருந்தது. உறங்கத்துவங்கிய அடுத்த அரை மணி நேரங்களில் செல்போன் தொடர்ச்சியாக ஒலிக்கத்துவங்கியது. பாதி தூக்கம் பாதி விழிப்பு என்கிற நிலையில் வரிசையாக போதை அழுகுரல்கள் அழைத்துக்கொல்லத்துவங்கவே செல்போனை சைலண்ட் மோடிற்கு மாத்தி தூக்கியெறிந்து விட்டு உறங்கத்துவங்கினேன்.

விடியற்காலையில்  12 மணிக்கு எழுந்த போது கண்களும் தலையும் உருளத்துவங்கியது. மெல்ல குளியல் கொடுமைகளை முடுத்துவிட்டு ( இப்போது மஸ்கட்டில் 45 டிகிரிக்கு மேல் வெப்ப நிலையிருப்பதால் இரவு பகல் எந்நேரமும் தண்ணீர் கொதிநிலையிலேயே இருக்கிறது) அறைக்கு திரும்பிய போது என் மொபைல் தரையில் கிடந்தது.

எடுத்து பார்த்து அதிர்ந்து போனேன், 16 மிஸ்ட் கால்களும் ஒரே ஒரு மெசேஜும் இருந்தது. அவசரமாக மெசேஜை படிக்கையில் IM DYING NOW என்ற ஒரே ஒரு வாசகம் ஏதோ ஒரு புது எண்ணில் இருந்து வந்திருந்தது. எனக்கோ ஒன்றும் புரியவில்லை. திரும்ப தொடர்பு கொள்ள முயன்ற போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து வெறிப்பிடித்தாற் போல் டயல் செய்துக்கொண்டிருந்தேன். பசி உயிரை எடுக்க ஆரம்பித்திருந்தது. முந்தின நாளின் சந்தோசக்கொண்டாட்டங்கள் அடங்கி வெறியேறத்துவங்கியது.

என்னிடம் இருந்த எண்களுக்கெல்லாம் தொடர்பு கொண்டு கேட்டபோது எவருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.
மூளையைக்கசக்கி யோசித்தபடியிருந்ததில் மணி மாலை ஐந்தை எட்டியிருந்தது.பசி, எரிச்சல் , குழப்பம் என முழுவதுமாய் ஒரு நாள் போயிருந்தது. தெரிந்த நண்பர்கள் முந்தின தின பார்ட்டியில் அழுதவனின் முகம், காதல் தோல்வி பற்றி பேசியவர்கள் என எல்லோரையும் யோசித்துக்கொண்டிருந்தேன்.

என்ன வகையான உணர்வென யோசிக்க முடியாதபடி மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது, முடிவில் எவன் செத்தா என்ன , இதுவரைக்கும் எவனும் எதுவும் சொல்லவில்லை. போய் டீ சாப்பிடலாம் என்பதாய் அறையை விட்டு கீழிறங்கத்துவங்கினேன்.

உனக்கும் எனக்குமான காதலும் , காமமும் ஏன் இவ்வளவு தீவிரமாயிருக்கிறது. நீ ஒரு மிருகத்தனமானவன். உன் வேகமும் வேட்கையும், காமமும் காதலும் நான் இதுவரையில் கண்டறியாதது. என் ஒழுக்க விதிகள் உன் முன் பறந்தோடிவிடுகிறது. உனக்கு முன்னால் எனக்கு நிர்வாணம் என்பது ஆடையாய் மாறி நீண்ட நாட்களாகி விட்டது. எனக்கான ஆண் நீதான். எனக்கான காதல் , காமம் தந்தவன்/ தரப்போகிறவனும் நீதான். உன்னிடம் ஏதோ ஒன்று என்னை உன்னோட வெறிப்பிடித்து ஆட வைக்கிறது, பெண் என்கிற கட்டுப்பாடுகள், தயக்கங்கள் எதுவும் எனக்காய் இல்லை. உன் எல்லா கோபங்களும் என்னுள் கிளர்ச்சியை உண்டாக்கிடுகிறதே தவிர வேறதையும் இல்லை.

வேறு எந்த ஆணுடனுமான என் நட்பைக்கூட நீ சந்தேகிக்கிறாய், சண்டை போடுகிறாய். எனக்கான அடிப்படையான உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறாய் ஆனாலும் நீதான் வேண்டும் நீ மட்டும்தான் வேண்டும் எனக்கு இதை என்னால் மாற்றிக்கொள்ள இயலவில்லை. எனக்காய் சொல்லப்பட்ட வார்த்தைகள் வார்த்தைகள் நெளி நெளியாய் பாம்பென மண்டையோட்டை கொத்தி கொல்லும் வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்..,

மூன்றாவது ரவுண்டுக்குப்பின்னால் அவன் அழத்துவங்கினான். தன் காதலியின் காதல் கடிதங்களை உறக்கப்படித்துக்காட்ட துவங்கினவனை நான் சமாதானப்படுத்தும் விதத்தில் என் காதல் தோற்றதை கூறத்துவங்கினேன். எதையும் காதில் கேட்டுக்கொள்ளாதவன், உனக்கு எதுவும் தெரியாது. நீ ஒரு முட்டாள் , உனக்கான உலகம் உன்னைப்போல பைத்தியக்காரத்தனமானது. உன்னால் எந்த ஒரு பெண்ணையும் சந்தோசப்படுத்த முடியாது. உன் கனவுகள் முட்டாள்தனமானது என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு கத்தத்துவங்கியவன் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
என்னை உனக்குப்பிடிக்குமாடா? எவ்வளவு பிடிக்கும் என்கையில் என்ன சொல்வதென்ற குழப்பத்தில் பார்த்துக்கொண்டிருந்தவன் ”மயிறு உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் எவ்வளவு என்றால் என்ன சொல்றது” என்றேன். மிக மெதுவாய் நெருங்கி அமர்ந்தவள் என் கை விரல்களை பிடித்து தன் விரல்களோடு பின்னிக்கொண்டாள். எனக்கு ஒரு முத்தம் கொடு என்றவளை பதட்டத்துடன் பார்க்கத்துவங்கினேன்.

நடுங்க துவங்கிய உடலோடு அக்கம் பக்கம் பார்க்கையில் எல்லா காதலர்களும் உலகை மறந்த நிலையில் இருப்பது கண்ணில் பட்டது. வெளிச்சம் சுழலத்துவங்கிய நேரத்தில் அவளை பார்க்கையில் எனக்கு கண்கள் இருளத்துவங்கின. உதடுகள் நடுங்க மிக அருகில் நெருங்கினேன். வேர்த்து விறுவிறுத்து நடுங்கி முத்தமிட முயற்சிக்கையில் உதடுகள் அவளின் மூக்கில் முட்டி எங்கோ போனது.

ஏழு கழுதை வயசாச்சு ஒரு முத்தம் கொடுக்க தெரியலை , கோபம் மட்டும் வருது எல்லாத்துக்கும் , போடா என்றவளை பரிதாபமாக பார்த்தபடி , இல்லடி இரு இந்த முறை ஒழுங்கா கொடுத்திடுறேன் என்று கெஞ்சி ஒரு வழியாக மீண்டும் நடுங்கி வழிந்து உதடு எல்லாம் வெளிறி கன்னத்தில் பட்டும் படாமல் கொடுத்து விட்டு பார்த்தியா கொடுத்திட்டேன் என்று பீற்றிக்கொள்ள

தூ உன் மூஞ்சி , லவ் பண்றவளுக்கு உதட்டில முத்தம் கொடுக்கனும்னு கூட தெரியல உன்னை எல்லாம் காதலிச்சு நான் என்ன பண்ண போறேன்னோ என்று தலையில அடித்துக்கொண்டவளை பரிதாபமாக பார்க்கத்துவங்கினேன்.

டீக்கடையில் இருந்து திரும்பிய பின்னால் செல்பேசியில் மீண்டும் அந்த எண்ணை தொடர்பு கொண்டேன், இப்போது எண் அடுத்த முனையில் ஒலிக்கத்துவங்கியது. எவரும் எடுக்காமல் போகவே மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டிருந்தேன்.


எடுத்துப்பேச துவங்கியதும் எனக்குள் அட அப்போ இவன் இன்னும் சாகலையா என்றொரு எண்ணம் வேகமாக கிளை விரித்தாடத்துவங்கியது. மிக மெதுவாக என்ன ஆச்சு எனக்கேட்கத்துவங்கினேன். காதலியின் பாரமுகம் , அவளின் நிச்சயதார்த்தம் என ஏதோ பேசத்துவங்கியவனை மறித்து சரக்கடிக்கலாம் வாடா சீக்கிரம் என்றவாறு மொபலை சுவற்றில் அடித்து உடைத்தேன்.

நான்கு துண்டங்களாக சிதறிக்கிடந்தது என் காதல் அவன் காதல் மற்றும் எல்லா காதலும்

( தற்கொலை செய்துக்கொள்ள போவதாய் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் தூரத்து நண்பனுக்கு )

Monday, July 13

சாரு நிவேதிதா, ஜ்யோவ்ராம் சுந்தர், டிவிட்டர் :) ரோசாவசந்த் பின்னெ வாரிசு கென்..,

எனக்கு எப்போவுமே தேமேன்னு கவிதைன்னு எதையாவது கிறுக்குறது இல்லாட்டி மூணாம்பு நாலாம்பு படிச்சப்போ நடந்த நரிக்கதை சொல்றது அதும் இல்லாட்டி சாராயக்கடை தோசை , தொக்கு , கொக்கு மடையான்னு கிறுக்குறதுதான் வேலை. முக்கியமா காதல் தோல்வி பற்றி வெறி வெறியா எழுதிக்குவிக்கிறது, அப்படியாச்சும் புது பிகர் எதும் மாட்டிடாதான்னு நப்பாசையில.

இப்படியே போயிக்கிட்டு இருக்கிறப்போதான் சாரு வந்தார் வாழ்க்கையில

வாரிசுன்னு சொன்னது சாருவோட பெருந்தன்மை. அவரோட பாராட்டும் குணம் எனக்கு அதுல துளிகூட நம்பிக்கையில்லை. முழு நேர எழுத்துன்னு வெறிப்பிடிச்சு வேலை செய்ற அளவுக்கு எனக்கு திறமையோ அறிவோ கிடையாது. ஏதோ எம்புருசனும் சந்தைக்குப்போனான்ற கதையா ஓசில வலைப்பூவில கிறுக்கிட்டு இருக்கேன்.

சாருவுக்கும் எனக்குமான நட்பு தாமரை இலை தண்ணீர் மாதிரிதான். சாரு என்னை வாரிசுன்னு சொன்னப்பிறகுதான் அவர்கிட்ட முதன் முதலில் பேசினேன். அதுக்குப்பிறகு ஒரு மாதம் கழித்துதான் போய் நேரில் பார்த்தேன். சொல்லப்போனா சாருதான் எனக்கு பார்ட்டி கொடுத்தார். வாசிக்க வேண்டிய அவசியம், எழுத்துன்னு வந்திட்ட செய்ய வேண்டிய உழைப்புன்னு அவரைப்பார்த்த பிறகு எனக்கு பெரிய நம்பிக்கையே வந்திடுச்சு. சாருன்னு கூப்பிடுங்க கென்னுன்னு ஆரம்பிச்சு ஒரு நண்பனா மாறி அவர் பேசின பின்னாடி அவரைப்பத்தின தவறான பிம்பங்கள் உடைஞ்சி போயிடுச்சு.

சாருவோட எழுத்து தனி உலகம் , அது சாக்கடைன்னு துப்புற ஆளுங்கதான் வெறிப்பிடிச்சு படிக்கிறாங்க, சாருவைக்கல்லால் அடிச்சு கொல்லன்னும்னு குதிக்கிறவங்க உள்மனசுல சாருவோட எழுத்து மேல தீராத மோகம் இருக்கு. அதுதான் சாருவோட எழுத்துக்குக்கிடைச்ச வெற்றி.

ஒரு நாள் கூட என்னிடம் நேரிலோ தனிப்பட்ட முறையிலோ பணம் கேட்டோ வேறு ஏதாவது கேட்டோ சாரு பேசியதில்லை. நான் கொடுத்ததும் இல்லை. அவர்தான் என்னை அவரின் தனிப்பட்ட நண்பர்களின் பார்ட்டிக்கு டீக்கடை என்றழைக்கப்படும் பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துப்போயி அவரின் நண்பர்களிடத்தில் என் நண்பர் கென் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

சாருவிடம் தனிப்பட்ட முறையில் பழகியவர்களுக்கு மிக நன்றாகத்தெரியும் அவரை நீங்கள் எந்த அளவுக்கும் விமர்சிக்க முடியும், மிக எளிமையாக எதைப்பற்றியும் விவாதிக்க முடியும். எழுத்தின் பிரமாண்டமோ , அகந்தையோ எதுவுமில்லாமல் வெகு சாதாரண மனிதராக வெகு நட்பாக பழகுபவர்.

அவரைப்பற்றிய எந்த விமர்சனத்திற்கோ , வெட்டி சண்டைகளுக்கோ நான் வால்பிடித்ததுமில்லை , எதிர்க்கோசம் இட்டதுமில்லை. சாரு அதை எதிர்பார்க்கிற மனிதரும் இல்லை.

இதையெல்லாம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கு பிறகு இங்கு பதிவிட காரணம் நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர்( ஒருத்தர்க்கு கண்வலி வந்தா சும்மா இருக்கிறதில்லை வந்து என் கண்ணை பாரு பாருன்னு கூப்பிட்டு நமக்கும் அதை ஒட்டி விடறது :) )

அவரின் பதிவை தொடர்ந்து நானிட்ட பின்னூட்டத்திற்கு நண்பர் ரோசா வசந்த் பதிலளித்திருக்கிறார்.

ரோசா வசந்தின் பின்னூட்டம்

சாருவை ஐஸ் வைக்கும் அவசியம் எனக்கு இருப்பதாக தெரியவில்லை. கவனமாகவே அவருடன் நான் நட்பு வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஜீரோ டிகிரி குறித்தும் (சாருவின் மற்ற எழுத்துக்கள் அல்ல) ஃபேன்ஸி பனியன் குறித்தும் அவை முக்கிய இலக்கிய ஆக்கங்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் அந்த கூட்டத்தில் அப்படி ஒரு கருத்தை கூட நான் சொல்லவில்லை. ஒருவர் சாரு தன் மனைவி குறித்து ஆபாசமாக எழுதவில்லையே என்பதாக முன்வைத்து பேசியதை, எம்.எஃப். ஹுஸைனின் ஓவியத்தை முன்வைத்து இந்துத்வாவின் ஒரு தர்கத்துடன் தொடர்பு படுத்தி ஒரு வரி பேசினேன். அது யாருக்கும் அங்கே புரிந்ததாக எனக்கு தோன்றவில்லை. அந்த ஒற்றை கருத்தை சாருவுக்கு நான் வைத்த ஐஸ் என்பதாக திரிக்கும் கென்னின் அறிவு மற்றும் நேர்மையுடன் உரையாடுவது எனக்கு சாத்தியமில்லை. பொதுவான தெளிவிற்காக இந்த பின்னூட்டம்

கென்,

̀நான் எல்லாரையும் தாண்டி சாருவிற்கு ஐஸ் வைத்தேன்' என்று அப்பட்டமாக நீங்கள் புளுகியதை பற்றி பேசுவது எனக்கு முக்கியமாக பட்டது. அந்த கூட்டத்தில் நான் பேசிய கருத்தை முக்கியமானதாக நினைக்கிறேன். அது எனக்கு நினைவும் இருக்கிறது என்பதால் அதை பற்றி பதில் சொன்னேன்.

கடற்கரை கூட்டத்தில் சாரு பற்றி உங்களிடம் என்ன பேசினேன் என்பது எனக்கு நினைவில்லை. தனிப்பட்ட முறையில் சொன்னதை என்னிடம் அனுமதி வாங்காமல், சுமார் ஒன்றரை வருடம் கழித்து, உங்கள் நினைவில் இருந்து பதிவில் எழுதுவது அநாகரிகம் என்பது கூட புரியாத உங்களிடம் நான் என்ன பேசமுடியும்! நான் சொல்லயிருக்க கூடியது அரசியல்ரீதியான கருத்து அல்ல. கிண்டலாக சொல்லியிருக்கலாம், வேறு ஏதாவது சொல்லி உங்களுக்கு வேறுவிதமாக புரிந்து இருக்கலாம். நீங்கள் சொல்லுவது போல கூடவும் சொல்லியிருக்கலாம், அப்படியிருந்தாலும் ரொம்ப அநியாயமாக ஏதோ சொல்லிவிட்டதாக எனக்கு தோன்றவில்லை. இது குறித்து பேச எதுவும் இல்லாததால் அதை தொடவில்லை


சாருவிற்கு நீங்கள் வைத்தது ஐஸ் அல்ல இந்துத்துவ ஒற்றை தர்க்க கருத்து நான் திரித்து புளுகிவிட்டேன் அய்யா அதற்காய் என்னிடம் என்னைப்பற்றி நேரடியாக நீங்கள் முன்வைத்த கருத்தை முதலில் நினைவில்லை , பிறகு தனிப்பட்ட முறையில் , அனுமதி வாங்கியிருக்க வேண்டும், ஒன்றரை ஆண்டுகள் கழித்து ( காலத்தை தெளிவாக நினைவு வைத்திருக்கிறார் ) .அரசியல் ரீதியான கருத்தில்லை, கிண்டலாக சொல்லியிருக்கலாம் இன்னும் பிற

எனக்குத்தெரிஞ்ச வரைக்கும் என்னோட அறிவுக்கு எட்டின வரைக்கும் உண்மையை சொல்ல யார்க்கிட்டேயும் அனுமதி வாங்கத்தேவையில்லை. உண்மைன்னு தெரிஞ்சா போதும் . மற்ற படி இலக்கிய சூத்திரங்கள் இன்னும் கொஞ்ச மூ த்திரங்கள்னு வாழ எனக்குத்தெரியாது.

நான் சரி / நான் மாத்திரம் சரியே சரி - நகுலன், இது கூட நகுலனை படிச்ச ஒருத்தர் எனக்கு சொன்னது.

நானும் ஒரு கேடு கெட்ட குட்டிப்பூர்ஷ்வாதான் நமக்கும் தொழில் முடிந்தவரை கலகம். கலகிய பின் எண்ணுதலும், பரிசீலித்தலும். அதற்கு பின்னும் சூழல் சாதகமாயிருந்தால் சில நல்லிணக்க முயற்சிகளை அவ்யப்போதாவது முன் வைப்பதுவும்தான்.

Saturday, July 11

பாப்லோ நெருதாவும் டான்ஸ்பார் பெண்ணும்






Well, now,
if little by little you stop loving me
I shall stop loving you little by little.

If suddenly
you forget me
do not look for me,
for I shall already have forgotten you.

If you think it long and mad,
the wind of banners
that passes through my life,
and you decide
to leave me at the shore
of the heart where I have roots,
remember
that on that day,
at that hour,
I shall lift my arms
and my roots will set off
to seek another land.

But
if each day,
each hour,
you feel that you are destined for me
with implacable sweetness,
if each day a flower
climbs up to your lips to seek me,
ah my love, ah my own,
in me all that fire is repeated,
in me nothing is extinguished or forgotten,
my love feeds on your love, beloved,
and as long as you live it will be in your arms
without leaving mine.


Pablo Neruda


ஏன் எல்லாமே மாறிப்போய்விடுகிறது , எங்கிருந்து வந்து தொலைத்தது என் மேலான உன் வெறுப்பு . நான் பைத்தியக்காரனென்றும் , புலம்பித்தவிக்கிறேனென்றும், எல்லா சிறு சந்தோசங்களையும் அழித்து விடுகிறவனென்றும் அடுக்கும் உன் குற்றச்சாட்டுகள் மிகச்சரியானவைதான். எனக்கும் உறவுகளுக்கும் எப்போதும் சிக்கலில்லாமல் இருந்ததில்லை. எப்போதுமே தோற்றுவிடுகிற பக்கத்தில் இருப்பவனுக்குதான் தெரியும் வலிகளும், அவமானங்களும். தோல்விக்குப்பிறகான எல்லா கேள்விகளும் பார்வைகளுமே பூதாகரமானதாகத்தான் படுகிறது பாழும் மனதிற்கு.

என்னோட கவிதையில் வரும் சஹானா என் அண்ணன் பொண்ணு. இப்போ நாலாவது படிக்கிறாள். எப்போ தொலைப்பேசினாலும் அவள் பேசுகிற வார்த்தைகள் “ எப்பப்பா ஊருக்கு வருவ, எனக்கு கொலுசு வாங்கிட்டு வா, அங்க ஒட்டகம் இருக்கா என்பதுதான் இவற்றையே மாத்தி மாத்திக்கேட்பாள்.

கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது; பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

கர்த்தர் சொன்னாரா இல்லையான்னு எல்லாம் எனக்குத்தெரியாது ஆனால் சிறுவயதுத்தொடங்கி மனுசர்களின் நினைவுகள் பொல்லாததாயிருக்கிறது என்பது மிகச்சரி என்றே எனக்குப்படுகிறது. நேசம் என்பது சிறகுகள் போன்று தோற்றமளித்தாலும் அதனுள் எப்போதுமே கூரிய நகங்கள் ஒளிந்தேயிருக்கின்றன. கிழித்து ரத்தம் புசிக்க ஒருபோதும் அது மறப்பதில்லை. எனக்கு நிகழ்ந்த எல்லாவற்றிலும் என் தவறு மிகப்பெரிது.

தகுதிகளைத்தாண்டி யோசித்தது, கனவின் கைப்பிடிக்குள் மூழ்கிக்கிடந்தது. துடைத்தெறிந்து விட்டு போகத்தெறியாதது இன்னும் என்னவெல்லாமோ இருக்கிறது.

வெயில் பொறுக்க முடியாத மஸ்கட்டின் பாலைவனத்திற்குள் எரிந்துப்போய்க்கொண்டிருக்கையில் ஒரு வயதான ஓமானியைப்பார்த்தேன். அவர் ஹிந்தியில் சொன்னார் இத்தனை வெயில் இந்த பருவத்தில் நிலவவில்லையெனில் நமக்கு ஒரு பேரிச்சம்பழமும் கிடைக்காது என்று. அடிக்கிற வெயிலுக்கும் ஒரு பலன் இருக்கையில் தோல்விகளைப்பற்றி மிகுந்த மனவருத்தம் அடையத்தேவையில்லை என்கிற மனப்பக்குவம் வந்தபடியிருக்கிறது.

காமம்தான் அடிப்படை, எந்த பெண்ணிடமும் அது கிடைக்கும் ஒரே ஒரு பெண் தான் உலகம் என்றால் நீங்கள் காண்டம் கிடைக்காத ஊரில் எய்ட்ஸ் நோய்க்கொண்ட பெண்ணுடன் உறவுவைத்துக்கொள்பவனாய் ஆகிடுவீர்கள். மிகத்தெளிவான பெண்ணொருத்தி எனக்கு தோழியாக வந்திருக்கிறாள். டான்ஸ் பாரில் ஆடுவதுதான் அவள் வேலை , மாலை ஐந்து மணியிலிருந்து விடியற்காலை 3 மணி வரையில் ஆடுவதுதான் அவள் வேலை. அவள் அறையில் ஐந்து பெண்கள் இருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ஹோட்டல் என்று வாரத்திற்கு ஒரு முறை மாற்றிக்கொள்கிறார்கள். தினமும் டிப்ஸ் ஒவ்வொருவருக்கும் 50 ரியால் முதல் 100 ரியால் வரை கிடைக்கிறது நமது பணத்தில் கிட்டத்தட்ட 12000 ரூபாய் ( 100 ரியால்) . எல்லோருமே 3 மாத விசிட் விசாவில் வந்திருக்கிறார்கள். மூன்று மாதம் இங்கும் அடுத்த மூன்று மாதம் மும்பையிலுமாய் சம்பாதிக்கிறார்கள்.

எல்லோருக்குமே ஒன்றுக்கு மேற்பட்ட காதலும் அதன் தோல்வியும் இருக்கிறது. இப்போது அவர்கள் மனிதர்களை மனிதர்களாய் பார்ப்பதில்லை. பணம் இருந்தால் கலவிக்கொள் இல்லையா தள்ளி நின்னு பல்லிலிச்சு பார்த்துட்டு போ என்பதாயிருக்கிறது.

என் தோழி மஹாராஷ்டிராவின் உள்ளூர் கிராமத்தில் பிறந்தவள் 16 வயதில் திருமணமாகி மும்பை வந்தவுடன் கணவனாலேயே விற்கப்பட்டவள். பிறகு தொழில் நேர்த்தி தெரிந்து டான்ஸ் பார்களில் ஆடுவது உபதொழிலாக உடல் தேவைப்பட்டால் ஆண்களைத்தேடுவது எனமாறிக்கொண்டாள்.

பகல்வேளைகளில் மிதமான போதையில் இருப்பாள் , என்னைப்பார்த்தால் ஏண்டா எப்போவுமே டல்லா இருக்கே ( அவளுக்கு தமிழும் தெரியும் மும்பையில் கற்றுக்கொண்டாளாம்) என்றபடி இழுத்து மடியில் படுக்க வைத்துக்கொள்வாள். அவர்களின் அறையில் ஆடைகள் , உள்ளாடைகள் மேக் அப் சாதனங்கள் இன்னும் என்னென்னவோ இறைந்துக்கிடக்கும். எப்போதுமே முழுக்கப்போர்த்திக்கொண்டு உறங்கும் ஒரு பெண் மிக அழகாக இருப்பாள். அவள்தான் இரவுகளில் வெறும் ஜட்டிப்போன்ற ஒரு ஆடையுடனும் அரைகுறை மேலாடையுடனும் ஆடிக்கொண்டிருக்கிறவள்.

என்னைத்தொடர்ச்சியாக திட்டுகிறவள் கேட்டாள் நீ எதுக்கு சும்மா இங்க வந்திட்டு உட்கார்ந்திட்டு போற , நீ வரதால நாங்க எந்த கஸ்டமரையும் வரச்சொல்றதில்ல தெரியுமா எனக்கடிந்துக்கொண்டாள். என் தோழியோ அவ கிடக்கிறாடா விடு , நீ சொல்லு எதுக்கு என்கிட்ட வர, செக்ஸ் வச்சிக்கனும்னு உனக்கு தோணலையா இல்லை எய்ட்ஸ் வந்திடும்ம்னு பயப்படுறியா எனக்கேட்டாள்.

அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தை படித்ததை நினைத்துக்கொண்டேன். மிக அழுந்த அவளின் உதடுகளில் முத்தமிட்டேன் விஸ்கியின் வாசம் தீராமல் என்னுடலுள்ளும் வீசத்துவங்கியதாய் மிதக்கத்துவங்கினேன். உறக்கம் கலைந்திருந்தது விடிந்திருந்த வானம் சன்னலின் வழி வெப்பக்கிரகணங்களை எறியத்துவங்கியது. விறுவிறுப்பான சாலையில் 120 கிமீ வேகத்தில் வாகனங்கள் பறக்கத்துவங்கின.

அலுவலகக்கணினியில் ஆன்லைனில் தேடத்துவங்கினேன் வேறொருவளை.

Older Posts

Blogger Template by Blogcrowds