நகங்களின் சதைத்துணுக்கை ருசித்தபடி
சிரிக்கிறான் புத்தன்
அமைதி தவழும் அந்தகாரமுகம்
குருதிப்புனலில் பரிகசிக்கிறது
மரணம் நிகழ்ந்திடாத வீடொன்றில்
பொருள் கேட்க சொன்னவன்
உயிர்ப்பறித்த வேட்கை தீர்ந்திடாமல்
சிரிக்கிறான்
நிறமிழந்த புலிகளை கூண்டுக்குள்
அடைத்தபின்
புற்களை தின்ன சொல்லி
கூக்குரலிடுகிறான்
யசோதைகளுக்கு என்ன புரியும்
எல்லாம் முடிந்தபின் ஆசையே
காரணம் என்றவனின் பேராசைக்கு
இறந்தவர்கள் இறக்கப்போகிறவர்களின்
எண்ணிக்கையில் சில ஆயிரம் கூடலாம்
அல்லது மொத்தமாய் மாளலாம்
நகங்களின் சதைத்துணுக்கை ருசித்தபடி
சிரிக்கிறான் புத்தன்
6 சொல்லிட்டுப்போனவங்க:
Arumai
அற்புதமான கவிதை.
புரிகிறது கென்.... சூப்பர்
I really enjoyed this poem..
your narration is excellent..
wish you all the best in your future attempts..
keep roaring dude..!
Hello,
I donno whether i understood your poem or not. Just read it only once. But mugathil araigirathu. Great Job. Keep it up.
nalla kaidhai naNbarE!
-priyamudan
sEral
Post a Comment