Saturday, September 26

தேவதையின் மீன் தொட்டி

தங்க நிற மீன்களை கண்ணாடிக்குளத்தில்

சுமந்தலைகிறாள் சஹானா

அலையடிக்காத அதன் கரைகளில்

மோதி உடைகின்றன நீர்க்குமிழிகள்

உள்ளுக்குள் வேர்விட்ட மரம்

கிளைவெடித்து குளம் நிறைக்கிறது

சுற்றும் சக்கரத்தின் முனைகளில்

பெருக்கெடுக்கின்றன

நதியோடு எதிர்முனைப்பில் நீந்தியக்காலங்கள்

கடலாகிறது குடுவை நதியாடுகின்றன மீன்கள்

வீசியெறியும் உணவின் ஈர்ப்பில்

கரையுடைக்கின்றன

கரங்களை உயர்த்தி ரட்சிப்பின்

மீட்சியை அவற்றுக்கும் தருகிறாள் சஹானா

5 சொல்லிட்டுப்போனவங்க:

Nundhaa said...

உங்களின் இந்த சஹானா தொடர் கவிதை மற்றவை போலவே அபாரம் ... எனக்கு மிகப் பிடித்திருக்கிறது

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்கு கென்.

மண்குதிரை said...

andha sonnathu poola shahana thodar enakku mikavum pitiththirukkirathu

நர்சிம் said...

////கடலாகிறது குடுவை நதியாடுகின்றன மீன்கள்
//

ரொம்ப நேரமா இந்த வரிகள் ஓடிகிட்டே இருக்கு பாஸ் உள்ளுக்குள்ள.

rajan RADHAMANALAN said...

//ரட்சிப்பின்

மீட்சியை //

அழகிய சொல்லாடல்... வாழ்த்துகள்

Post a Comment