பாடையின் மூங்கில்களில் கட்டப்பட்டிருக்கும் குரல்
போகும் வழியெங்கும்
பிணத்தின் காதுகளில் எதிரொலித்திருக்கும்.
தோண்டப்பட்ட புதுக்குழியினுள்ளே
நேற்றையவர்களின் எலும்புகள் மண்டையோடுகள்
பீச்சியடித்த சாராயத்தின் ருசியில்
வெட்டப்பட்ட குழியின் அளவைபடுத்தே
அளப்பவனுக்கும் அதன் குரல் எதிரொலிக்கும்
மூன்றாம் சுற்றில் உடைந்த பானை
ஈரமாக்கும் தானிய விதைகளை
கடைசியாய் பார்த்தபோது அவன் புன்முறுவல் செய்திருக்கலாம்
நாளைய பிணக்குழியில் கண்டடைவீர்கள்
சிரித்த முக மண்டையோட்டை
செரித்துப்போன கோழியின் மிச்ச எலும்புகளை
Labels: கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
ரொம்ப நல்லா இருக்கு கென்.
யாத்ரா said...
December 10, 2009 8:44 PM
நன்றி யாத்ரா :)
கென்., said...
December 10, 2009 8:46 PM
வாழ்த்துகள் கென்....
மீண்டும் மீண்டும் வாசித்தேன்
rajan RADHAMANALAN said...
December 11, 2009 9:53 AM
அருமையாய் இருக்கு கென்!
இளவட்டம் said...
December 11, 2009 11:14 AM
நன்றி ராஜன் & இளவட்டம் :)
கென்., said...
December 11, 2009 11:39 AM
ரொம்ப நல்லாயிருக்கு கென் :)
ரௌத்ரன் said...
December 12, 2009 2:45 AM
திரும்ப திரும்ப வாசிக்க சொல்லும் கவிதை...
அழகு...வாழ்த்துக்கள்...
கமலேஷ் said...
December 13, 2009 5:05 PM
நன்றி கமலேஷ்
கென்., said...
December 13, 2009 5:09 PM